Monday 2 July 2012

மூலிகைகள்

மூலிகைகள்

மூலிகைகளின் எண்ணிக்கை:

மூலிகைகளின் எண்ணிக்கை இருபது இலட்சம் என்று சித்தர்கள்
கூறியுள்ளதாகக் குன்றத்தூர் இராமமூர்த்தி குறிப்பிடுகிறார்.
அவை,


1. கற்ப மூலிகைகள் (Refuvemating Herbs)

2. ஞான மூலிகைகள் (Spiritual Herbs)

3. இரசவாத மூலிகைகள் (Alchemical Herbs)

4. வசிய மூலிகைகள் (Psychie Herbs)

5. மாந்திரீக மூலிகைகள் (Magic Herbs)

6. வழிபாட்டு மூலிகைகள் (Religious Herbs)

7. பிணி தீர்க்கும் மூலிகைகள் (Therapeutic Herbs)

8. உடல் தேற்றி மூலிகைகள் (Tonic Herbs)

9. உலோக மூலிகைகள் (Metallogenic Herbs)

10. வர்ம மூலிகைகள் (Chiropratic Herbs)

11. விஷ மூலிகைகள் (Toxic Herbs)

12. நஞ்சை முறிக்கும் மூலிகைகள் (Antidotes)

13. எலும்பொட்டும் மூலிகைகள் (Bone Sectors)

14. சதை ஒட்டும் மூலிகைகள் (Muscle Tones)

15. பச்சை குத்தும் மூலிகைகள் (Tattooing Herbs)

16. காதணி ஓம்பி மூலிகைகள் (Ear Boring Herbs)

17. பல்பிடுங்கும் மூலிகைகள் (Herbs for Dental Extraction)

18. கருச்சிதைவு மூலிகைகள் (Abortifacient Herbs)

என்று மூலிகைகள் வகைப்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.





வாத நூல்கள்:

வாதம் என்பது இரசவாதம் என்றும், இரசவாதம் என்பது உலோகங்களைப் பொன்னாக 
மாற்றுகின்ற கலை என்றும் பொருள்படும்.

இரசவாதம், இரசத்தை மூலப்பொருளாகக் கொண்டு செய்யப் படுகின்ற குருமருந்தை, நூற்றுக்கு ஒன்று என்ற அளவுக்குத் தாழ்ந்த உலோகங்களுடன் சேர்ந்து உருக்கினால், அந்த உலோகங்கள் பத்தரை மாற்றுத் தங்கம் போலாகும் என்பர்.

வாதக் கலையால் உலோகங்களைத் தங்கமாக மாற்றிக் கொண்டிருப்பது சித்தர்களின் நோக்கம் அன்று. செய்யப்படுகின்ற குருமருந்தானது சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா? என்று சோதித்து அறியவே உலோகங்களுடன் சேர்த்து உருக்கிச் சோதிக் கின்றனர். குருமருந்தைச் சேர்த்தால், தாழ்ந்த உலோகம் பொன்னாக மாறுவதைப் போல, குற்றமுடைய உடலினர்க்குக் கொடுத்தால் அக்குருமருந்து, அவர்களைக் குற்றமற்ற உடலினராக மாற்றும். அதன் பின்னர் யோக நெறிநின்று நீண்ட காலம் உயிர் வாழலாம் என்பதே வாதத்தின் நோக்கமாகும்.

அவ்வாறான வாதக் கலையைக் கூறுகின்ற நூல்கள் பல காணப்படுகின்றன. அவை,


அகத்தியர் வாத சௌமியம் – 1200

அகத்தியர் இலக்க சௌமிய சாகரம்

கொங்கணர் வாத காவியம் – 3000

கருவூரார் வாத காவியம் –

சட்டைமுனி வாத காவியம் –

யாகோபு வாத காவியம் – 400

திருவள்ளுவர் வாத சூத்திரம் – 80

யூகி வாதாங்க தீட்சை – 300

யூகி வாத வைத்தியம் – 200

யூகி பிடிவாதம் – 1000

யூகி வாத உலா – 1000

யூகி வாத கும்மி – 1000

யூகி வாத காவியம் – 2000

மாந்திரீக மூலிகை குப்பை மேனி:


மாந்திரீக மூலிகை குப்பை மேனி:



*குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது.இதை யாரும் வளர்ப்பதில்லை,காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது .

*சிறு செடியாக வளரும்.குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். வசீகரப்படுத்தும் இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். .

*நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

*இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட  தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப்  உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.

*வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம் 200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

மருத்துவ குணங்கள்:

*குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.

*குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.


*குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.


*குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.


*குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.


*குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டு வர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்து மப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.


*குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.


*குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில் வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)


*எப்போதும் எந்த மூலிகைகளையும் தகுந்த மருத்துவரை ஆலோசித்து பின் உள்ளுக்கு சாப்பிடுவது நல்லது .இது அணைத்து மூலிகைகளுக்கும் பொருந்தும் .

*மேலும் எந்தமூலிகையும் சுத்தி செய்தல் என்று ஒரு முறை உள்ளது .அது இன்னும் பலரிடம் ரகசியமாகவே இருக்கிறது .மேலும் மூலிகைகளின் மாந்திரிகத்தன்மை குறித்தும் பெரிய தகவல்கள் மர்மமாக உள்ளது .ஒட்டுன்னிகளைப் பற்றியும் பல தகவல் உள்ளது.

ஆகாச கருடன்

ஆகாச கருடன்

ஆகாச கருடன்
சித்தர்களின் அபூர்வமான மூலிகைகள் பல உள்ளன அவற்றை அவ்வப்போது படங்களுடன்,உபயோகத்தையும் விளக்கி வருகிறேன்.இந்தப் பதிவில் அத்தகைய ஒரு சிறப்பான மூலிகை ஒன்றை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பன மிகச் சிறப்பு வாய்ந்தன.இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவுவன.


எடுத்துக்காட்டாக தொட்டாற் சிணுங்கிச் செடிகளை செய்வினை மற்றும் ஏவல்,பில்லி சூனியத்துக்காக மண் பொம்மை,மற்றும் மாப்பொம்மை செய்யும்போது அதன் உள்ளே வைத்துச் செய்து அதற்கான மந்திரங்களை உருவேற்றி,யாருக்குச் செய்வினை செய்ய வேண்டுமோ அவர் பெயரில் இந்த பொம்மை உருவேற்றப்படும்.பின் இந்த பொம்மைக்கு எந்த இடத்தில் ஊசி செருகப்படுகிறதோ அந்த இடம் செயலிழக்கும்.பின் அந்த பொம்மையின் இருதய ஸ்தானத்தில் ஊசி செருகப்படும் போது மாரடைப்பாலோ,வேறு காரணங்களாலோ உயிர் பிரியும்.


இவ்வளவு சக்தியுள்ள மூலிகைகளை நல்லவற்றுக்கும் பயன் படுத்தி உள்ளனர்(இதில் கெட்ட செய்கைகளுக்கு யாரும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதால் செய்வினை செய்தலில் சில சூட்சுமங்கள் மறைக்கப்பட்டுள்ளன.தயவு செய்து இது குறித்து மேலும் கேள்விகள் கேட்க வேண்டாம்).அது போல நம்மை அழகாகப் பாதுகாக்கும் ஓர் மூலிகையை இங்கே விவரிக்கிறேன்.எனது வீட்டில் உள்ள ஆகாச கருடன் படமே இது.உபயம் திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன்.தேவைப்படுபவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளவும்.
ஆகாச கருடன்
ஆகாச கருடன்
கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும்.அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.


கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும்.அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).
இந்தக் கிழங்கை நஞ்சு முறிவிற்காக கொடுப்பர்.இதற்கு கொல்லன் கோவை,பேய்ச் சீந்தில் என்றும் அழைப்பர்.தாவரப் பெயர்:- BRYONIA EPIGOEA.


அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை
கரையாத கட்டியிவை கானார்- வரையிற்
றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு
கருடன் கிழங்கதனைக் கண்டு.


கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும்.கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.


துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி
குட்ட மரிப்பக்கி கோண் குடனோய்- கெட்டகண்ட
மாலைபோங் கொல்லன்கோ வைக்கிழங்கால் முத்தோஷ
வேலைப்போம் பாரில் விளம்பு.


கொல்லன் கோவைக் கிழங்கால் மஹா விஷம், தேக வெளுப்பு, சுரம், வாதசூலை, சிரங்கு, பெரு வியாதி, நமைச்சல், வக்கிர நேத்திரம், குடல் வலி, கண்டமாலை, திரி தோஷம் ஆகிய நோய்கள் தீரும்.
செய்கை:-வியதாபேதகாரி(ALTERNATIVE){வியாதியை நாளுக்கு நாள் குணமாக்கிச் சரீரத்தை ஆரோக்கிய நிலையில் கொண்டு வரும் மருந்து},
பலகாரி(TONIC){தாதுக்களுக்கு பலம் கொடுக்கும் மருந்து}.    
உபயோகிக்கும் முறை:- இந்தக் கிழங்கை அரைத்து கொட்டைப் பாக்களவு 2-3 அவுன்ஸ் வெந்நீரில் கலக்கி தினம் ஒரு வேளையாக 3 நாள் கொடுக்க நாய், நரி, சிறுத்தை, குரங்கு, பூனை, குதிரை, முதலை, வேங்கை, இவைகளின் கடி விஷங்களினால் உண்டான பற்பல தோஷங்கள் போகும்.கடி வாயிலும் இதனை அரைத்துப் பூசுதல் நன்று. இதனில் இரண்டொரு கடலைப் பிரமாணமுள்ள துண்டுக் கிழங்கை வெற்றிலையுடன் கூட்டிக் கொடுக்க தேள்,நட்டுவக்காலி இவைகளினால் உண்டான விஷமும் நெறி கட்டுதலும் போகும்.


கருடன் கிழங்கு,குப்பை மேனி, அவுரி, ஆவாரை, கீழ்காய் நெல்லி(இலைக்கு கீழ் காய் காய்ப்பதால் இவ்வாறு அழைப்பார்கள்.கீழாநெல்லி என்பதும் கீவா நெல்லி என்பதும் இதுவே),இவ்வைந்து இலைகளையும் இடித்து சாறு பிழிந்து உள்ளுக்குள் கொடுத்து,உடம்பில் துவாலையிட(உடம்பில் மேற்பூச்சாக பூச)அஷ்ட நாக விஷங்களும் போகும்.


கடும் விஷ நாகங்கள் கடித்தவருக்கு ஒரு எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி தின்னும் படி செய்ய வாந்தி பேதி ஏற்பட்டு நஞ்சு முறியும்.நோயாளரை ஒரு 24 மணி நேரத்திற்கு தூங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.


இந்த ஆகாச கருடன் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைத்து,நிழலில்காய வைத்து,தூளாக்கி துணியில் சலித்து(வஸ்திர காயம் செய்து) எடுத்துக் கொண்டு பேய்ச் சுரைக் கூட்டில் நாற்பத்தெட்டு நாட்களுக்கு குறையாமல் வைத்திருந்து, நாற்பத்து எட்டு நாட்கள் சாப்பிட குட்டம்,மண்ணுளிப்பாம்பின் நஞ்சு, தீரும்.உடல் காயசித்தியாகும்.     


இந்த ஆகாச கருடன் ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட கிழங்காதலால் இதில் உயிர்ச்சக்தி அதிகம் உள்ளது.உயிர் உடலை விட்டு ஓடும்போது முதலில் ஆகாய பூதத்தை எடுத்துக் கொண்டுதான் ஓடும்.இந்தக் கிழங்கை நாம் படுக்கும் இடத்திலோ,பூஜை செய்யும் இடத்திலோ,அமர்ந்து வேலை செய்யும் இடத்திலோ கட்டி வைத்தால் நமது தலைக்கு அது ஆகாய பூதத்தின் சக்தியை கொடுத்து வரும்.இதனால் நமது ஆயுள் பெருகும்.ஞானமும் நம்மைத் தேடி வரும்.ஏனெனில் ஆகாயம் சிதம்பரம்.சிவனாகிய சிவன் அதனால்தான் அங்கே சிவ பாகமான வலது கால் தூக்கி ஆடுகிறான்.        
திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அலைபேசி எண்கள்
+919894912594
+919943205566

அவரது முகவரி:-
பெ.கண்ணன்.
 
சதுரகிரி ஹெர்பல்ஸ்,
 
2/147,மங்கம்மாள் கோவில் தெரு,
 
கான்சாபுரம்,(P-O)
 
திரு வில்லிபுத்தூர் தாலுகா,
 
விருதுநகர் மாவட்டம்.

பெண் வசியம் செய்யும் மூலிகை


பெண் வசியம் செய்யும் மூலிகை காமவர்த்தினி
தொட்ட உடன் தன்னை சுரு க்கிக் கொள்ளும் தொட்டா ற் சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொ டுகின்ற போடு அதனுள் இரு க்கும் சக்தி மின்சாரம்போல நம் முள் பாயும். நாற் பத்தெ ட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக் குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர். மனதில் உணர்ச்சியை அதி கரித்து சிற்றின் பத்தை ஊட்டுவதால் காமவர்த்தினி என்றும் அழைக்கின்றனர்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் சிட்டோ, ஸ்டி ரால், பினிடால், நார்எபிநெப் ரைன், மிமோலைன், டேனின் உள்ளன. விதைகள் மியூசிலே ஜ் கொ ண்டவை. இதில் குளுக் கோனிக் அமிலம் ஆகியவை காணப்படு கின்றன.
மாந்தீரிக மூலிகை
தொட்டாற்சுருங்கி செடி மந்திரீக தன்மை உடையது.
பகரவே இன்னமொரு மூலிகேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக் கட்டி நிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.” என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய் யப் பயன்படுத்துவர்.
சிறுநீர் கோளாறுகளை போக்கும்
ஒரு மீட்டர் உயரம் வளரக்கூடிய இந்த புதர் ச்செடியின் தண்டு மற்றும் இலைக் காம்புகள் முட்களால் மூடியவை. இலை கள் மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் கொண்டவை.
இலைகளின் சாறு சைனஸ்,மூலநோய், புண் புரைகளுக்கு மருந் தாகிறது. பசை சுரப்பிகளின் வீக்கம் மற் றும் விரை வீக்கத்திற்கு மேல் பூச்சாகிறது. வேர் சிறுநீர் உறுப்பு கோளாறுகளை போக்கும். இதன் இலையைக் களி மண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ் வாதம் கரையும்.

இதன் வேரையும் இலை யையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணி யில் சலித்து வைக்க வும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும் பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச் சூடு, ஆசன க்கடுப்பு தீரு ம். சூடு பிடித்தால் சிறு நீர்த்தாரை எரியும். இதற்கு இதன் இலை யை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குண மாகும்.
ஆண்மை பெருகும்

பத்து முதல் இருபது நாட்கள் தொடர்ந்து உட்கொள்ள சிற்றின் பம் பெருகும். ஆண் மை பெருக இரவு பா லில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமி ச்சை யளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப் புண் ணும் ஆறும்.
ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரை பஞ்சு போல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடு க்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுத்து வர நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.
இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசன த்தில் தடவி வர அவை விரைவில் ஆறும். இதன் இலையை மெழுகு போல் அரைத்து விரை வாதம், கை, கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வை த்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற் றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத புண் களில் வைத்து கட்டி வைக்க ஆறி வரும்.
வசியம் உண்டாகும்
வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலி கை என்பதால் துளசி போல வீட்டில் வைக் கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத வில க் காகும் பெண்கள் இச்செடியின் அரு கில் செல்லக் கூடாது, தொடுதலும் கூடாது. தொட்டாற் சுருங்கி மேக மூத்தி ரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டு கின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும்.

தாயார் மஹா லட்சுமி வழிபாடு !


தாயார் மஹா லட்சுமி வழிபாடு !



பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  இதய கமலத்தில் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் தாயார் மஹா லட்சுமி தேவியை போற்றி இந்த பதிவை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் :

  தாயார் மஹா லட்சுமி குடிகொண்டு இருக்கும் இடங்களில் அணைத்து ஐஸ்வர்யமும் , சகல செல்வங்களும் நிச்சயம் குறைவின்றி நிறைந்திருக்கும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , அப்படியெனில் தாயார் மஹா லட்சுமி எங்கு நிரந்தரமாக குடிகொண்டு அருள் புரிந்து நலம் தருகிறாள் , எம்பெருமானின் இதய கமலத்தில் , அந்த இதய கமலம் எதை போன்றது , பரிசுத்தமான கருணையும் அன்பும் கொண்டது . அதுமட்டுமா  தம்மை மார்பில் எட்டிஉதைத்த பக்தனுக்கும் கருணை தந்த இதயம் அல்லவா அது ?

  தாயார்
மஹா லட்சுமி நிரந்தரமாக குடிகொண்டு இருக்கும் எம்பெருமானின் இதயம் குளிர்மை நிறைந்த இடமாகும், என்பே அங்கு தாய்  மஹா லட்சுமி விரும்பி நிரந்தரமாக ஜீவிதம் பெறுகிறாள், தாய்  மஹா லட்சுமி குணம் சிறு குழந்தையின் தன்மையை போன்றது , எங்கு அன்பும் பாசமும் அதிகம் உள்ளதோ அந்த இடத்தில்  தாய்  மஹா லட்சுமி நிறைந்து இருப்பாள், அப்படி பட்ட நிரந்தரமான ஓர் இடம் எம்பெருமானின் இதய கமலமே .

நமது முன்னோர்கள் இந்த சூட்சம விஷயங்களை கடவுள் வழிபாடுகள் மூலம் நமக்கு தெளிவாக உணர்த்தினார்கள் , நாம்தான் இதை இன்னும் புரிந்து கொள்ள வில்லை, ஒரு குடும்பத்தில் புதிதாக திருமணம் ஆனா தம்பதியருக்கு , முதலில் பிறக்கும் குழந்தை பெண்ணாக அமைந்தால் அந்த குழந்தையை தாயார்
  மஹா லட்சுமி , ஆகவே பாவித்து அதிக பாசத்தையும் , அன்பையும் கொடுத்து செல்லாமாக வளர்த்தனர் , இதானால் குழந்தையின் வடிவில் தெய்வம் வந்து நின்று அந்த குடும்பத்தை காத்து அருள் புரிந்தது என்பது அசைக்க முடியாத முன்னோர்களின் நம்பிக்கை , ஒருவகையில் முதன் முதலாக பெண் குழந்தையை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்களே .

எப்படி தாயார்
  மஹா லட்சுமி அன்பு , கருணை , பாசம் , குளிர்மை நிறைந்த பகவானின் இதய கமலத்தில் நிரந்தரமாக உள்ளாரோ , அது போல் நமது இல்லங்களிலும் , உள்ளங்களிலும் குடியிருக்க வேண்டுமெனில் நமது இல்லமும் , உள்ளமும் பரிசுத்தமானதாகவும் ,  அன்பு , கருணை , பாசம் , குளிர்மை நிறைந்த இடமாகவும் இருப்பது அவசியம் .

 எவருடைய இல்லங்களிலும் , உள்ளங்களிலும் வெஞ்சினம் , கோபம் , வஞ்சகம் , பொய், கபடம், அமைதியின்மை ,போன்ற நிலைகளில் இதயம் தீ போல் எரிந்து கொண்டு இருக்கிறதோ,
அங்கு தாயார்
  மஹா லட்சுமி தனது பாத கமலங்களை கூட வைப்பதில்லை, ஒவ்வொரு ஆணும், பெண்ணும்  இதை உணர்வது மிக அவசியம் .

ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி ஆகிய எட்டு தேவியரே அஷ்ட லட்சுமிகள் என போற்றப்படுகின்றனர். இவர்களது ஒட்டுமொத்த அம்சமான மகாலட்சுமியை மன சுத்தத்துடனும் பய பக்தியுடனும் விரதமிருந்து வழிபடுவோம். செல்வ செழிப்பு, நில புலன்கள் வாங்கும் யோகம், கல்விச் செல்வம், அடுத்தவர்கள் மீது கருணையும் இரக்கமும் காட்டுகின்றன மன வளம், புகழ், அமைதியான வாழ்வு, மகிழ்ச்சி, தைரியம் ஆகிய அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வோமாக.
 
நாம் அனைவரும் எம்பெருமானின் இதய கமலம் போல் அன்பு , கருணை , பாசம் , குளிர்மை , மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன்  இனி வரும் காலங்களில்  இருப்போம், தாயார் மஹா லட்சுமி அணைத்து 
ஐஸ்வர்யமும் , 16 வகை  செல்வ வளங்களையும் நம்  அனைவருக்கும் தந்து அருள் புரிவார் .

மஹா லட்சுமி  / தன ஆகர்ஷன வழிபாட்டினை பிராப்தம் உள்ளவர்கள் நேரில் வந்து பெற்று,  வழிபடும் முறையினை தெரிந்து கொண்டு சகல நலமும் பெறுங்கள் .


வாழ்க வளமுடன் 

தன ஆகர்ஷன பைரவர் அர்ச்சனை

தன ஆகர்ஷன பைரவர் அர்ச்சனை






ஓம் ஸ்ரீம் தன வயிரவா போற்றி

ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி

ஓம் ஸ்ரீம் தன நாதா போற்றி

ஓம் ஸ்ரீம் தனத் தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குல தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குருநாதா பொறி

ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி

ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி

ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி

ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி

ஓம் ஸ்ரீம் வறுமையின் மருந்தே போற்றி

ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி

ஓம் ஸ்ரீம் திருவுடைசெல்வா போற்றி

ஓம் ஸ்ரீம் தினம்தினம் காப்பாய் போற்றி

ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் திருவருள் திரண்டாய் போற்றி

ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி

ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தாந்த வாழ்வே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முழுநிலவினாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி

ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முழுதனம் தருவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முகிழ நகை வயிரவா போற்றி

ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி

ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்யவந்தாய் போற்றி

12 ராசிகளின் மூலிகையும், சக்கரமும் பயனும் மூலிகையின் அற்புதமும்

மூலிகை ஆராய்ச்சி
"முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே யீசன் மகனே - யொருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால்
எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்."

12 ராசிகளின் மூலிகையும், சக்கரமும் பயனும் மூலிகையின் அற்புதமும்
ஒவ்வொரு மனிதனும் நல்ல நேரம் வரும் பொழுது நன்மையும், கெட்ட நேரம் செயல் படும் பொழுதும் கெட்டவையே நடக்கும் எனினும் இராசியை வசியப்படும் அற்புத மூலிகையும் உண்டு என்று சான்று கூறுப்படுகிறது.
இனி 12 இராசிகாரர் பற்றி மூலிகையும் பயனும்


1. மேசம் :- [ அசுவனி-4பா + பரணி + 4 பாத கிருத்-] 9
வணங்க வேண்டய எந்திரம் :-    பால ஷ்ண்மக ஷடாஷர
மூலிகை :-                              வைகுண்ட மூலிகை

2.ரிஷபம் :- [கிருத் - 3 பாத, ரோஹினி 4 பா + மிருக சீவிடம் 2 பா 9]
எந்திரம்             :-  ஹி மஹாலட்சுமி எந்திரம்
மூலிகை            :-  அம்மான் மூலிகை

3.மிதுனம் :- [மிருக-உபாத + திருவாது + 4 பாத +புனர் புனர் -3 9 பாத]
எந்திரம்           :- ஸ்ரீ தன ஆகர்ஷன யந்திரம்
மூலிகை          :- அற்ற இலை ஒட்டி

4. கட்கம் :-[புனர் பூரம் - 1 பாத + பூசம் 4 பாத +ஆயுல் + பாத ] 9 பாத
எந்திரம்          :- ஸ்ரீ துர்கா யந்திரம்
மூலிகை         :-  நத்தை சூரி மூலிகை

5.சிம்மம :-[ மகம் 4 பாத + பூசம் 4 பாத + உத்திரம் 1 பாத] 9 பாத
எந்திரம்           :- ஸ்ரீ சிதம்பர சக்கரம்
மூலிகை          :- ஸ்ரீ விஷ்ணு மூலி

6.கன்னி :- [ உத்திரம் 3 பாத + அஸ்தம்- 4 பாத + சித்து 2 பாத] 9 பாத
எந்திரம்         :- ஸ்ரீ சுதர்ஸன யந்திரம்
மூலிகை        :- துளசி

7. துலாம் :- [ சித்தி 2 பாத + சுவாதி 4 பாத + விசாக 3 பாத] 9 பாத
எந்திரம்         :- ஸ்ரீ சூலினி யந்திரம்
மூலிகை        :- செந்நாயுருவி

8.விருட்சகம் :-[விராக 1 பாத + அனுஷம் 4 பாத + கேட்டை 4 பாத] 9 பாத
எந்திரம்         :- பால சண்முக  ஷாடத்ச்சர  எந்திரம்
மூலிகை        :- மஞ்சை  கிளுகிளிப்பை

9.தனுசு :- [மூலம் 4 பாத + பூராடம் 4 பாத + உத்திராடம் 1 பாத] 9 பாத
எந்திரம்        :-   தன சக்ர யந்திரம்
மூலிகை       :-   சிவஞர் மூலி

 10.மகரம் :-[ உத்திராடம் 3 பாத + திருவோ 4 பாத +அவிட்,உபாத ] 9 பாத
எந்திரம்       :- ஸ்ரீ பைரவ யந்திரம்
மூலிகை      :- யானை வணங்கி

11.கும்பம் :- [அவிட்உபாத +சதயம் 4 பாத + புராட்டாது 3 பாத] 9 பாத
எந்திரம்     :- ஸ்ரீ கணபதி யந்திரம்
மூலிகை    :- தகரை மூலிகை

12.மீனம் :-  [புரட்டாது 1 பாத + உத்தி 4 பாத + ரேவதி 4 பாத]
எந்திரம்     :- ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம்
மூலிகை    :- குப்பை மேனி